5,008 பேர் கலந்து கொண்ட சத்தியநாராயண பூஜை - சைவ ஆதீனங்கள், ஜீயர்கள் பங்கேற்பு
தை மாத பெளர்ணமியை முன்னிட்டு ஐந்தாயிரத்து 8 பேர் கலந்து கொண்ட சத்திய நாராயண பூஜை நடைபெற்றது.
நெல்லை கைலாசபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தைப்பூச படித்துறையில் தை மாத பெளர்ணமியை முன்னிட்டு ஐந்தாயிரத்து 8 பேர் கலந்து கொண்ட சத்திய நாராயண பூஜை நடைபெற்றது. முன்னதாக கணபதி, நவக்கிரக மற்றும் சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றது. கோபூஜையை தொடர்ந்து பசுக்களுக்கு அபிசேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதனையடுத்து தாமிரபரணி நதிக்கு மகா ஆரத்தியும் காட்டப்பட்டது. இந்த விழாவில் சைவ ஆதீனங்கள், ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story