எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் - சிலைக்கு மரியாதை

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் - சிலைக்கு மரியாதை
x
தூத்துக்குடி தேரடிதிடலில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி,ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவியும் கேக் வெட்டியும் அதிமுகவினர் கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களும், கடலூர் எம்.பி. அருண் மொழித்தேவனின் ஆதரவாளர்களும் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகரில் எம்ஜிஆரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. 

ஆந்திர மாநிலம் சித்தூரிலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், 102 கிலோ கேக் வெட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்