குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி

திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.
குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி
x
திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில்  அமைச்சர் நடராஜன் ,அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகராட்சியின் 65 வார்டுகளில் இருந்து வரும் குப்பைகள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன .நகரத்தின் மையத்தில் உள்ள இந்த குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 49 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்