108 ஆம்புலன்ஸில் வேலை பார்த்த போலி மருத்துவர்

108 அவசரகால மருத்துவ சேவையில் மருத்துவர் என்று கூறி வேலைபார்த்தவர் மீது 108 மருத்துவ சேவை நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
108 ஆம்புலன்ஸில் வேலை பார்த்த போலி மருத்துவர்
x
108 மருத்துவ சேவை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளது. அதில் கடந்த 6 மாதமாக வேலூரை சேர்ந்த ரேச்சல் ஜெனிபர் என்பவர் 108 அவசர கால சிகிச்சை சேவைப் பிரிவில் வேலை பார்த்து வந்தார் எனவும் அவர் குறிப்பிட்ட மருத்துவ பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, அவர் மருத்துவர் இல்லை என தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக அவரை தொடர்பு கொண்டபோது அவருடைய செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ரேச்சல் ஜெனிபர் 2015 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்ததாக கூறி 108 அவசர கால சிகிச்சை சேவையில் வேலையில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்