திருத்தணியில் விபத்து... ஆந்திராவில் உடல்...
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி, மாயமான இளைஞரின் உடல், ஆந்திராவில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், சுதாகரின் கால் மட்டும் துண்டாகி, விபத்து நடந்த பாண்டூர் கிராமத்தில் கிடந்தது. ஆனால், அவரது உடலை காணவில்லை. இதனார், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுதாகரின் உடல் கிடப்பது தெரிய வந்தது. விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக, சென்ற சிமெண்ட் லாரிக்குள், சுதாகரின் உடல் தூக்கி வீசப்பட்டதால், கடப்பாவுக்கு உடல் சென்றதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, 18 மணி நேரத்துக்கு பிறகு, சுதாகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் உடல், ஆந்திரா வரை சென்று திரும்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story