குற்றால அருவியில் 12 அடி மலைப்பாம்பு : சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி அருகே உள்ள தடாகத்தில் இன்று காலை மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
குற்றால அருவியில் 12 அடி மலைப்பாம்பு : சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
x
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி அருகே உள்ள தடாகத்தில் இன்று காலை மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 12 அடி நீளமும் 40 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு எப்படி அருவியின் அருகே உள்ள தடாகத்திற்கு வந்தது என்பது தெரியவில்லை. தடாகத்தில் சுற்றிய மலைப்பாம்பை செங்கோட்டை தீயணைப்பு துறையினர் ,வன உயிர் பாதுகாவலர் ஷேக் உசேன் உதவியுடன் பிடித்து வனத்தில் விட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மழை பகுதியில் இருந்து அந்த மலைப்பாம்பு அடித்து வரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்