சென்னையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆய்வகம்

நாட்டிலேயே முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வகத்தை சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆய்வகம்
x
இதற்கான நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மையத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அடையாறு மருத்துவ மைய தலைவர் மருத்துவர் சாந்தா, தொடக்க நிலையிலேயே இந்த நோயை கண்டறிவதன் மூலம் இதனால் ஏற்படக்கூடிய மரணங்களைக் குறைக்கலாம் என்றார். 

இந்தியாவில் இதற்கான பரிசோதனை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் முதன் முறையாக இந்த ஆய்வகம் அமைவது பெருமையான விஷயம் என்றும் விரைவில் விழுப்புரத்தில் மேலும் ஒரு மையம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்