மெர்சல் மருத்துவர் காலமானார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த "மெர்சல்" மருத்துவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மெர்சல் மருத்துவர் காலமானார்
x
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன். கடந்த 1972-ம் ஆண்டில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மருத்துவமனை தொடங்கிய இவர், ஆரம்பக் காலத்தில் 2 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்தார். காலப்போக்கில் அதை ஐந்து ரூபாயாக உயர்த்திய ஜெயச்சந்திரன், தற்போது வரை அதற்கு அதிகமாக வசூலித்ததில்லை. மருந்து, மாத்திரைகளையும் இலவசமாக  வழங்கியதால் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சிகிச்சைக்கு வரும் வயதானவர்களுக்கு ஆட்டோவில் செல்ல பணம் கொடுத்து அனுப்பி வைக்கும் வழக்கம் கொண்டவரான ஜெயச்சந்திரன், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தியுள்ளார். 

ஜெயச்சந்திரனின் தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டிய நிலையில், கடந்த ஆண்டில் வெளியான மெர்சல் திரைப்படத்தில், 5 ரூபாய் டாக்டராகவே விஜய் நடித்திருப்பார். 71 வயதான ஜெயச்சந்திரன், உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இதனால் வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்