தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு
x
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பன்வாரிலால், நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், இந்தியா இன்னும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேராமல் இருப்பதாக தெரிவித்தார். யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என தெரிவித்த பன்வாரிலால்,  இறைவன் நம்மை கண்காணிக்கிறார் என்ற பயம் இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்