"7-பேர் விடுதலையை ஆளுநர் வெளியிட வேண்டும்" - ராமதாஸ்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை அறிவிப்பை, ஆளுநர் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7-பேர் விடுதலையை ஆளுநர் வெளியிட வேண்டும் -  ராமதாஸ்
x
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை அறிவிப்பை, ஆளுநர் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை காலாவதியாகிவிட்டதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 7 பேர் விடுதலையை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், தீர்மானம் அனுப்பி 17-ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7-பேரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை ஆளுநரும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்