சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்
சென்னையில் நேற்று காலமான இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரில், தகனம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டுமேடு கிராமத்தில் நெல் ஜெயராமன் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் காமராஜ் மற்றும் தமிமூன் அன்சாரி உள்ளிட்ட முக்கி ய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பகல் 11 மணிக்கு இறுதி சடங்கு முடிந்து, நெல் ஜெயராமனின் உடல், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில், தகனம் செய்யப்பட்டது.
Next Story