எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
x
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் கரிசல் பூமியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 

மேலும் சண்டக்கோழி, தாம் தூம், பீமா, பாபா, அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது... இந்த விருது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்