ஜோதிடம் பார்க்க வரவழைத்து ஜோதிடர் கடத்தல்...
தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூர் ஜோதிடரை, ஜோதிடம் பார்க்க வர சொல்லி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* மனோகர் எனும் ஜோசியரை, ஒரு சிலர் ஜோதிடம் பார்ப்பதற்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவரை பிடித்து வைத்துக் கொண்டு, மனைவியிடம் 20 லட்ச ரூபாய் கேட்டு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மனைவி சாரதா திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
* திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பந்தநல்லூர் , அணைக்கரை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை, ஆய்வு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடத்தல் தகவலை கேள்விபட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
Next Story