இறைச்சி விற்பனை கடைகளில் சோதனை - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

கோவையில் உள்ள இறைச்சி விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இறைச்சி விற்பனை கடைகளில் சோதனை - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
x
சென்னையில் இரண்டாயிரம் கிலோவிற்கு மேல் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கோவையிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு  நடத்தினர். சாய்பாபா காலனி, வடவள்ளி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கூடங்களில் கடையின் உரிமம் மற்றும் இறைச்சியின் தன்மை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்