இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட பணம் கொள்ளை - வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 3 லட்சம் திருட்டு

சென்னை பூந்தமல்லி பகுதியில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட பணம் கொள்ளை -  வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 3 லட்சம் திருட்டு
x
சென்னை பூந்தமல்லி பகுதியில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வங்கியிலிருந்து பணம் எடுத்து கொண்டு சென்ற அவர் வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற போது பணம் திருடப்பட்டுள்ளது. இதே போல் அதே பகுதியை சேர்ந்த  தேவராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்திலிருந்தும் 1 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவரும் வங்கியிலிருந்து 
பணம் எடுத்து சென்ற போது இச்சம்வம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்