"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காகா ராமகிருஷ்ணா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தமிழக அரசு, இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
Next Story