பூங்காவில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு
கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலை, கைகளில் வெட்டு காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த குருமூர்த்தி - ராஜலட்சுமி ஜோடியை பார்த்த பொதுமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, ராஜலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் ஜோடி அளித்த புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story