பழகிய பெண்ணை வெட்டி கொன்ற விவசாயி

அந்தோணி என்பவர் நேற்றிரவு சாலையில் நடந்து சென்ற பாத்திமா மேரியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பழகிய பெண்ணை வெட்டி கொன்ற விவசாயி
x
கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். விவசாயியான இவருக்கு திருமணமாகி 4 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அந்தோணிராஜ், பாத்திமாமேரி என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார். பாத்திமாமேரிக்கு திருமணமாகி 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கும் இடையே ஒருசில ஆண்டுகளாக நீடித்து வந்த பழக்கம், பாத்திமாமேரி வீட்டாருக் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர், அந்தோணியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி நேற்றிரவு சாலையில் நடந்து சென்ற பாத்திமா மேரியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் 2 உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்