ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் : தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற நவராத்திரி விழா
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பக்குளத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
Next Story