துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி வழங்காதது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் 252 துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி ஆகியவை தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பிலும் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்ட போதும் பெரும்பாலான பகுதிகளில் ஊழியர்களே வெறும் கைகளால் சுத்தம் செய்யும் நிலை உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story