நெல்லையில் தொடங்கியது, தசரா திருவிழா...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையில் தொடங்கியது, தசரா திருவிழா...
x
* தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தசரா பண்டிகைக்கு பிரசித்தி பெற்றது, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்கள். இதனையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 கோவில்களிலும் இன்று காலை கொடியேற்றப்பட்டது.

* முன்னதாக ஆயிரத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, யானையின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 19-ந் தேதி 12 அம்மன்களின் சப்பர வீதி உலாவும், 20-ந் தேதி  நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்