ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பிற்கு திரும்பிய ஊழியர்கள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஆலை குடியிருப்பிற்கு, மீண்டும் ஊழியர்கள் அனைவரும் திரும்பியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பிற்கு திரும்பிய ஊழியர்கள்
x
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பில் வசித்து வந்த ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த ஒருமாத காலமாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, திரும்பி வருமாறு அழைப்பு விடுத்து வந்த‌தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆலை இயங்க அனுமதி கிடையாது, நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் குடியிருப்பிற்கு மீண்டும் வந்து சேர்ந்துள்ளதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்