மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் தொடர்பாக, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலையில் இரு அவைகளும் கூடிய சிறிது நேரத்திலேயே, எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று பாஜக தனது அதிகார பலத்தை பயன்படுத்தி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து  விட்டதாக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அலுவல்களை நடத்த விடாமல் கூச்சல் எழுப்பியதால், கடும் அமளி நிலவியது. இதனையடுத்து மக்களவையும், மாநிலங்களவையும் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்