கிரண்பேடி பங்கேற்ற கூட்டத்தில் அரசு ஊழியர் உயிரிழப்பு : கழிவறை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் குறை தீர் கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு ஊழியர் உயிரிழப்பு.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் குறை தீர் கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புள்ளியியல் துறை ஆய்வாளராகப் பணிபுரியும் அப்பாராவ் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் அலுவலக கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, காரணத்தால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவை உடைத்து சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Next Story