மக்களிடம் பொய் சொல்லி ஓட்டு வாங்கியது தி.மு.க. - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தி.மு.க. மக்களை தூண்டிவிட்டு குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களிடம் பொய் சொல்லி ஓட்டு வாங்கியது தி.மு.க. - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால்,  தி.மு.க. மக்களை தூண்டிவிட்டு குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பேசிய   அமைச்சர் எஸ் பி வேலுமணி, திமுக கூட்டணி பல்வேறு பொய் பிரச்சாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றதாக குற்றம்சாட்டினார். ஆனாலும், ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக 9 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அ.தி.மு.க. அரசை கலைத்துவிட்டு ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் இன்றைக்கு திமுகவின் ஒற்றை கொள்கை என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்