போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் முறைகேடு : விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் நடந்துள்ள 800 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் நடந்துள்ள, 800 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும், முறைகேடு செய்த கல்வி நிறுவனங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும், உண்மையான பயனாளிகளுக்கு, இந்த கல்வி உதவித் தொகை போய் சேருவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story