பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடி பங்கேற்பு

ஏழை பொது பிரிவினருக்கு10 % இட ஒதுக்கீடு விவகாரம்
பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடி பங்கேற்பு
x
புதுடெல்லியில் கூடிய பா.ஜ.க தேசிய கவுன்சில் 2 - வது நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பது - மக்களை கவர எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இளைஞர்களே பாஜகவின் பலம் என்றார். எனவே, இளைஞர்களின் வாக்குகளை கவரும் யுக்தியை கடைபிடிக்குமாறு
நிர்வாகிகளை, அவர் கேட்டுக்கொண்டார். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு குறித்து, நாட்டு மக்களுக்கு விளக்கி கூற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்