சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு
x
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கருணாநிதி கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூக நீதி, ஜனநாயக கொள்கைகளின் முழக்கமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியை நம்மை விட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் மாற்றுக் கட்சியினரும் அதை உணரத் தொடங்கி இருப்பதால் தான் தி.மு.க.வில் தங்களை ஒப்படைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. வெற்றிக்காக, தொண்டர்கள் கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திடுவதே கருணாநிதிக்கு செய்யும் தொண்டு என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்