கஜா புயல் பேரிடராக அறிவிக்க வேண்டும் - கமல்ஹாசன்
கஜா புயலை தேசிய பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்படி பேரிடராக அறிவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
ஒருவருக்கொருவர் குற்றம் குறைகளை கூறிக்கொண்டு இருக்காமல் கட்சி பாகுபாடின்றி ஒருங்கிணைந்து நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் ஆதார தேவைகளான குடிநீர், உணவு, மின்சாரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story