"28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு" - குமாரசாமி கருத்து

கர்நாடக இடைத் தேர்தல் முடிவு, கூட்டணி தொடர்பான பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு - குமாரசாமி கருத்து
x
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும், அதன் முதல் படிதான் இந்த வெற்றி என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும், இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம் என்றும் கூறினார். தங்கள் கூட்டணி தொடர்பான பா.ஜ.க. குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளதாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்