ஹெச்.ராஜாவுக்கு ஒரு சட்டம், கருணாஸுக்கு ஒரு சட்டமா ? - ஸ்டாலின்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஒரு சட்டம், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு ஒரு சட்டமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெச்.ராஜாவுக்கு ஒரு சட்டம், கருணாஸுக்கு ஒரு சட்டமா ? - ஸ்டாலின்
x
கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை கைது செய்திருப்பது, தமிழகத்தில் "ஆளுக்கொரு நீதி - வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் சட்டம் அமல்படுத்தப்படுவது தெரிவதாக கூறியுள்ளார். ஆனால் சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசியவரும் ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்ன வகை நியாயம் என்று புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல் எஸ்வி சேகர் கைதுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றமே மறுத்தும் கூட அவரை அ.தி.மு.க அரசு கைது செய்ய தயக்கம் காட்டுவது என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கைது செய்ய வேண்டியவர்களை அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தாமதிக்காமல் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்