எம்.எல்ஏ கருணாஸ் தலைமறைவு - தேடும் பணியில் 3 தனிப்படை போலீசார்

முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.எல்ஏ கருணாஸ் தலைமறைவு - தேடும் பணியில் 3 தனிப்படை போலீசார்
x
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், முதலமைச்சர் மற்றம் காவல் அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

இதனை தொடர்ந்து கருணாஸ் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில், 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஸை தேடும் பணியில் 3 தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்