வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 பழமையான சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்
x
புதுச்சேரி ரோமன் ரொலான் வீதியில் உள்ள வீடு ஒன்றில், சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அந்த வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஐம்பொன் சிலைகளும், பழங்கால கற்சிலைகளும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 60 ஐம்பொன் சிலைகளையும், 14 கற்சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விநாயகர், நடராஜர், அம்பாள், அனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ஜூன் பால் ராஜரத்தினம் என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்