கங்கனா ரணாவத் மீது சிவசேனா போலீசில் புகார் - பிரிவினையை தூண்டுவதாக சிவசேனா குற்றச்சாட்டு

பிரபல இந்தி நடிகை கங்கணா ராவத் மீது சிவசேனா தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கங்கனா ரணாவத் மீது சிவசேனா போலீசில் புகார் - பிரிவினையை தூண்டுவதாக சிவசேனா குற்றச்சாட்டு
x
பிரபல இந்தி நடிகை கங்கணா ராவத் மீது  சிவசேனா தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மும்பை மற்றும் மகாராஷ்டிர மாநிலம்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். பிரிவினையை தூண்டுவதாக வழக்குப் பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கோரியுள்ளது. இதனிடையே, தமக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்ததற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ள கங்கனா ரணாவத், அமித்ஷா அறிவுறுத்தினால், மும்பைக்கு அடுத்த சில நாட்களில் செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்