வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய விமானப்படை, மீட்பு பணியில் எம்ஐ17வி5 ஹெலிகாப்டர்

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய விமானப்படை, மீட்பு பணியில் எம்ஐ17வி5 ஹெலிகாப்டர்
x
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் பாலகாட்டில் உள்ள மோவாட் கிராமத்தில் வைங்கங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இந்த பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க எம்ஐ17வி5 ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்