மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் - பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத் துறை அதிகாரி

ஆந்திராவில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும் என கூறிய பெண் ஒப்பந்த ஊழியரை அரசு சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தாக்கிய வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் - பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத் துறை அதிகாரி
x
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில சுற்றுலாத்துறை விடுதியில் துணை மேலாளராக இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்ப்பவர் உஷாராணி. வேலை விஷயமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மாஸ்க் அணிந்துவிட்டு பேசுங்கள் என பாஸ்கர் ராவிடம் உஷாராணி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர்  ராவ், அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே உஷாராணியின் தலைமுடியை பிடித்து அடித்து கீழே தள்ளினார். இதில் அந்த  பெண் அலறித் துடித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார், பாஸ்கர் ராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்