கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலி - கர்நாடகாவில் அரசு பேருந்துகள் இயக்கம்

ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலி - கர்நாடகாவில் அரசு பேருந்துகள் இயக்கம்
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் சில தளர்வுகளுடன் அங்கு அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், தலா 30 பயணிகளுடன் 15 அரசு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர்  பேருந்து நிலையத்திலிருந்து குண்டல்பேட்டை மற்றும் கொள்ளேகால் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்