பாவப்பட்ட குரங்கின் பசியாற்றிய போலீஸ் - சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி வீடியோ...
ஊரடங்கை மீறுகிறவர்களிடம் கடுமை முகம் காட்டுகிறது போலீஸ். ஆனால் அவர்களுக்கும் மென்மையான பக்கம் உண்டு எனச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஊரடங்கை மீறுகிறவர்களிடம் கடுமை முகம் காட்டுகிறது போலீஸ். ஆனால் அவர்களுக்கும் மென்மையான பக்கம் உண்டு எனச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...கொரோனா ஊரடங்கு பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கியிருக்கிறது. இதனால் மனிதர்களையே நம்பி உயிர் வாழும் சாலையோர விலங்குகள் பலவும் பட்டினி கிடந்து வருகின்றன.
இந்த விலங்குகளின் பசியைப் போக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களெல்லாம் தங்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ளும் படியான காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு கைகளும் இல்லாத ஒரு குரங்குக்கு போலீஸ்காரர் ஒருவர் மிக அழகாக வாழைப்பழத்தை ஊட்டி விடுகிறார். பொதுமக்கள் முன் கடுமை காட்டும் போலீஸ் காரர்களிடமும் இளகிய மனம் உண்டு எனச் சொல்கிறது இந்த வீடியோ.
Next Story