கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...
கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா
x
இவ்வளவு பெரிய கலவரம் அரங்கேறியிருப்பது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தான். வெளிநாட்டிலிருந்து இந்த மாவட்டத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட நெல்லூர் மாவட்டத்தில் கொரோனா உள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லூர் மாவட்டம் கோவூர் மண்டலம் விடவலூர் - லட்சுமிபுரம் கிராமத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கிராமங்களில் முள்வேலிகளை அமைத்து தற்காத்துக் கொண்டனர். இதனால் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இந்த கொரோனா வேலியை இருவர் தாண்ட, வெடித்தது போர்.

Next Story

மேலும் செய்திகள்