அசோக் விஹார் பகுதியில் வழிபாட்டு தலம் தீ வைக்கப்பட்டதா? - டெல்லி காவல் துறை மறுப்பு
டெல்லி அசோக் விஹார் பகுதியில் வழிபாட்டு தலம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக வெளியாகும் தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி அசோக் விஹார் பகுதியில் வழிபாட்டு தலம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக வெளியாகும் தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவுவதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டால் கண்டவுடன் சுடும் உத்தரவு தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story