ஆந்திரா : காளை முட்டியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆந்திராவில் நடைபெற்ற மாடி பிடிக்கும் போட்டியில் காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆந்திரா : காளை முட்டியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு
x
ஆந்திராவில் நடைபெற்ற மாடி பிடிக்கும் போட்டியில் காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம்  பரதமிட்டா கிராமத்தில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாடுபிடிக்கும் பேட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான காளை மாடுகள் கலந்துகொண்டன. போட்டியில்  காளையை அடக்க முயன்றபோது மாடு முட்டியதில்,  அப்துல் பாஷா என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், அனுமதியின்றி போட்டியை நடத்தியவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்