ராணுவ வரலாற்றில் இடம் பிடித்தார் பிபின்ராவத்

அரசியலில் இருந்து ராணுவத்துறை வெகு தொலைவில் இருப்பதாக முப்படைகளின் புதிய தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
ராணுவ வரலாற்றில் இடம் பிடித்தார் பிபின்ராவத்
x
டெல்லியில் போர்நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை புதிய தலைமை தளபதி பிபின் ராவத் ஏற்றுக் கொண்டார். பின்னர், தரைப்படை, கப்பல் படை, விமானப்படைகளின் தளபதிகள், புதிய தலைமை தளபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் புதிய தலைமை தளபதி பிபின் ராவத், அரசியலில் இருந்து ராணுவத்துறை வெகு தொலைவில் உள்ளது என்றார். முப்படைகளிடம் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன் என அவர் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்