ஜவுளி கடையில் ரூ. 7 லட்சம் கொள்ளை வழக்கு - நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்கள் கைது
ராஜஸ்தானை சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்தனர். சாம் குஜார் ,மகேஷ் சவுத்ரி, தயாள் பாகர் ஆகிய 3 பேரும் சென்னை பூக்கடை ஜவுளிக்கடையில்
7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொளத்தூர் நகைக்கடைகொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் நாதுராமை பிடிக்க தமிழக தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story