"திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது" - ஆந்திர மாநில முதன்மை செயலாளர் திட்டவட்டம்

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், திருப்பதி தேவஸ்தான பணிகளில் நீடிக்க முடியாது என்று ஆந்திர மாநில முதன்மைச் செயலர் எல்.வி. சுப்ரமணியன் கூறினார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது - ஆந்திர மாநில முதன்மை செயலாளர் திட்டவட்டம்
x
இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், திருப்பதி தேவஸ்தான பணிகளில் நீடிக்க முடியாது என்று ஆந்திர மாநில முதன்மைச் செயலர் எல்.வி. சுப்ரமணியன் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்து மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் அல்லது பணியில் இருப்பவர்கள் மதம் மாறினால் திருப்பதி தேவஸ்தானம், இந்து அறநிலையத் துறை பணிகளில் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க உள்ளதாகவும் கூறினார். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், அந்த பணியில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுப்ரமணியன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்