டேட்டா காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை
சர்வதேச நிறுவனங்களின் டேட்டா காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச நிறுவனங்களின் டேட்டா காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற வலிமையான குஜராத் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், அரசியல் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக மகாத்மா காந்தி போராடியது போல, இந்தியாவின் டேட்டா சேமிப்பு இந்தியர்களிடமே இருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சர்வதேச நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினார். டேட்டா தான் எதிர்கால உலகம், புதிய சொத்துகள் என்றும் முகேஷ் அம்பானி சுட்டிக்காட்டி உள்ளார்.
Next Story