மார்ச் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை

முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்