போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்
x
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய அரசின் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களும் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணி, பெண்களுக்கான பிரத்யேக சந்தைகளுக்குள் நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டக்கார‌ர்களை கலைத்தனர். இதில், ஒரு போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்