திருப்பதி : தங்கரதத்தில் பத்மாவதி திருச்சானூர் பத்மாவதி தாயார்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி : தங்கரதத்தில் பத்மாவதி திருச்சானூர் பத்மாவதி தாயார்
x
ஆறாவது நாளான நேற்று மாலை தங்க ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் தங்கரதம் உலா வந்தது. இரவு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர். மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இன்று காலை  சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திர பிரபை வாகனத்திலும் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்