பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் சென்ற ரவுடிகள் - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்ட 3 பேர் ஊழியரை தாக்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.
பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் சென்ற ரவுடிகள் - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்
x
புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட 3 பேர் ஒரே பைக்கில் வந்துள்ளனர்.  பெட்ரோல் போட்ட அவர்கள் மூவரும், ஊழியரை தாக்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஊழியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய  திக்குவாய் செந்தில் , ராம்குமார், முண்டக்கண் ஆனந்த் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்