அவனி என்ற பெண் புலியை சுட்டுக் கொன்ற விவகாரம் - வனத்துறையினரின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
வனப்பகுதியில் 13 பேரை கடித்து குதறிய அவனி என்ற பெண் புலியை, வனத்துறையினர் கடந்த 3ஆம் தேதி சுட்டு கொன்றனர்.
மராட்டிய மாநிலம், எவத்மாள் மாவட்டத்தில் உள்ள பண்டார்க்கவாடா போராட்டி வனப்பகுதியில் 13 பேரை கடித்து குதறிய அவனி என்ற பெண் புலியை, வனத்துறையினர் கடந்த 3ஆம் தேதி சுட்டு கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையை சேர்ந்த பல தனியார் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அமைச்சரை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவனி புலியின் 2 குட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story